INFOS SMART

Monday, September 30, 2019

நல்ல நண்பன் வேண்டும் என்று, படம்: நண்பன், பாடல் வரிகள்: நா முத்துக்குமார்


நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா!!!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா!!!


இறைவனே இறைவனே, இவன் உயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துகொள், உனக்கது  போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி, அதை மரணம் தின்பதா?
இவன் சிரித்து பேசும் ஒலி, அதை வேண்டினோம் மீண்டும் தா?


நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மேவனத்தில்,
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா?


இறைவனே இறைவனே, உன்னக்கில்லை இரக்கமா?
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா?
வா நண்பா வா நண்பா தோழ்களில் சாயவா!!
வாழ்ந்திடும் நாளெல்லாம் நான் உன்னை தாங்கவா!!!

படம்: நண்பன்
பாடல் வரிகள்: நா முத்துக்குமார்

No comments:

Post a Comment