INFOS SMART

Monday, December 1, 2025

கோடைகால காற்றே


கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

மனம் தேடும் சுவையோடு ...தினம்தோறும் இசைபாடு ...அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...

இவைகள் இள மாலைப்பூக்களே... புது சோலைப்பூக்களே

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

[Music and chorus]

வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ....

வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ....

தன் உணர்வுகளை மெல்லிசையாக... தன் உறவுகளை வந்து கூடாதோ... இது நாளும் கூடட்டும்... சுகம் தேடி ஆடட்டும்...

இவைகள் இள மாலைப்பூக்களே... புது சோலைப்பூக்களே....

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

[Music and chorus]

ஏதோ ஒன்றை தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே...ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே...

வெண்மலைஅருவி பன்னீர் தூவி பொன் மலைஅழகின் சுகம் ஏற்காதோ.... இவை யாவும் பாடங்கள்...

இனிதான வேதங்கள்.... இவைகள் இள மாலைப்பூக்களே... புது சோலைப்பூக்களே....

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

மனம் தேடும் சுவையோடு ...தினம்தோறும் இசைபாடு ...அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...

இவைகள் இள மாலைப்பூக்களே... புது சோலைப்பூக்களே

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே ...

பாடல் வரிகள்: கங்கை அமரன்

படம்: பன்னீர் புஷ்பங்கள்