இருட்டு ஒருமுறை கடவுளிடம் சென்று புகார் செய்தது.
" இந்த சூரியன் எப்போதும் என்னிடம் வம்பு செய்துகொண்டே இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் என்னை துரத்திக்கொண்டே வருகிறது. சூரியனால் மிகவும் தொல்லைப்பட்டுவிட்டேன். பொழுது விடிந்தால் அது என்னை கட்டிப்போட்டு விடுகிறது. மாலை நேரம் வரும்போது மிகவும் சிரமப்பட்டுதான் நான் அதனிடமிருந்து விடுபட வேண்டி இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன் ? ஏன் சூரியன் என்னிடம் பகைமை பாராட்டுகிறது ? என்னை துன்புருத்துவதற்காக அது இரவு பகலாக சுற்றி வருகிறது. அதனிடமிருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா ? சூரியனிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லி, கண்டித்து வையுங்கள்." என்றது
" இந்த சூரியன் எப்போதும் என்னிடம் வம்பு செய்துகொண்டே இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் என்னை துரத்திக்கொண்டே வருகிறது. சூரியனால் மிகவும் தொல்லைப்பட்டுவிட்டேன். பொழுது விடிந்தால் அது என்னை கட்டிப்போட்டு விடுகிறது. மாலை நேரம் வரும்போது மிகவும் சிரமப்பட்டுதான் நான் அதனிடமிருந்து விடுபட வேண்டி இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன் ? ஏன் சூரியன் என்னிடம் பகைமை பாராட்டுகிறது ? என்னை துன்புருத்துவதற்காக அது இரவு பகலாக சுற்றி வருகிறது. அதனிடமிருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா ? சூரியனிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லி, கண்டித்து வையுங்கள்." என்றது
கடவுள் சூரியனை வரவழைத்துச் சொன்னார் : " நீ ஏன் இருட்டைத் தொல்லை
செய்கிறாய் ? இருட்டு உனக்கு என்ன கெடுதல் செய்தது ? எதுவானாலும் என்னிடம்
சொல். " என்றார் .
சூரியன் சொன்னது :" என்ன, இருட்டா ? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றி வந்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை நான் இருட்டைப் பார்த்ததே இல்லையே. இருட்டைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே ! எங்கே இருட்டு ? அதை என் முன்னாள் வர சொல்லுங்கள். நான் ஏதும் குற்றம் புரிந்திருந்தால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலாவது நான் அதை பார்த்து விடுகிறேன்." என்றது
சரியென்று கடவுள் இருட்டை அழைத்தார். ஆனால் இருட்டால் ஒளி இருக்கும் இடத்திற்கு வர முடியவில்லை. எப்படி வர முடியும் ? ஒளியே இருட்டை தேடி சென்றாலும் இருட்டு மிக மிக தொலைவாக ஓடிவிடும்.
ஒளி என்பது உண்மை. ஒளி என்பது அறிவு. ஒளிதான் அன்பும் திறமையும். இவற்றை தன்னிடம் கொண்டிருக்கும் எவரையும், உலகின் எந்த சக்தியும் தோற்கடிக்க முடியாது நட்புகளே...
நட்புகளே...
நமக்கும் தேவை... குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்..
தினமணியில் படித்ததை எழுதியது சிதம்பரம் திருஞானம்.
சூரியன் சொன்னது :" என்ன, இருட்டா ? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றி வந்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை நான் இருட்டைப் பார்த்ததே இல்லையே. இருட்டைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே ! எங்கே இருட்டு ? அதை என் முன்னாள் வர சொல்லுங்கள். நான் ஏதும் குற்றம் புரிந்திருந்தால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலாவது நான் அதை பார்த்து விடுகிறேன்." என்றது
சரியென்று கடவுள் இருட்டை அழைத்தார். ஆனால் இருட்டால் ஒளி இருக்கும் இடத்திற்கு வர முடியவில்லை. எப்படி வர முடியும் ? ஒளியே இருட்டை தேடி சென்றாலும் இருட்டு மிக மிக தொலைவாக ஓடிவிடும்.
ஒளி என்பது உண்மை. ஒளி என்பது அறிவு. ஒளிதான் அன்பும் திறமையும். இவற்றை தன்னிடம் கொண்டிருக்கும் எவரையும், உலகின் எந்த சக்தியும் தோற்கடிக்க முடியாது நட்புகளே...
நட்புகளே...
நமக்கும் தேவை... குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்..
தினமணியில் படித்ததை எழுதியது சிதம்பரம் திருஞானம்.