INFOS SMART

Monday, September 30, 2019

நல்ல நண்பன் வேண்டும் என்று, படம்: நண்பன், பாடல் வரிகள்: நா முத்துக்குமார்


நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா!!!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா!!!


இறைவனே இறைவனே, இவன் உயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துகொள், உனக்கது  போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி, அதை மரணம் தின்பதா?
இவன் சிரித்து பேசும் ஒலி, அதை வேண்டினோம் மீண்டும் தா?


நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மேவனத்தில்,
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா?


இறைவனே இறைவனே, உன்னக்கில்லை இரக்கமா?
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா?
வா நண்பா வா நண்பா தோழ்களில் சாயவா!!
வாழ்ந்திடும் நாளெல்லாம் நான் உன்னை தாங்கவா!!!

படம்: நண்பன்
பாடல் வரிகள்: நா முத்துக்குமார்

Sunday, September 29, 2019

ஒரு நாளில் வாழ்க்கை… படம்: புதுப்பேட்டை, பாடல் வரிகள்: நா.முத்துக்குமார்


ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓ! கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓ! ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓ! கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓ! கண் மூடிக்கொண்டால்ஓஓஓஓஓஓ

போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓ! அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓ! இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓ! மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓ! அந்த கடவுளை கண்டால்ஓஓஓஓஓஓ

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓ! பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஓஓஓ! பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
ஓஓஓ! கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
ஓஓஓ! மறு பிறவி வேண்டுமாஓஓஓஓஓஓ

படம்: புதுப்பேட்டை
பாடல் வரிகள்: நா.முத்துக்குமார்