INFOS SMART

Saturday, September 10, 2016

குற்றம் 23



முகம் தெரியா உயிர் துடிக்க... முகம் திரும்பிச்ச் செல்வது குற்றம் தான்….
நண்பன் விழி கசிகையிலே உன் நழுவல் குற்றம் தான்….
நீதிமன்றம் சொல்வது மட்டும் குற்றமில்லை…
நெஞ்சம் சொல்லும் நியாயத்தை கேளடா….
வாழெடுத்து கொல்வது மட்டும் குற்றமில்லை வார்தைகளால் கொல்வதும் குற்றம்தான்….
உன்னை நம்பிவரும் பெண்ணையே நிர்கதியாய் விடுதல் குற்றம்
உன்னை உயிராக்கிய பெற்றோரை மறத்தல் குற்றம்…
நெற்றிக்கண் திறந்தால்கூட குற்றம் குற்றம் குற்றம்தான்…
குற்றத்தின் தோழன் ஆசை…
குற்றத்தின் வாசல் கோபம்...
குற்றத்தின் பலனே பாவம்….
குற்றங்கள் வாழவின் சாபம்….
அறிவுகளின் கூச்சல் குற்றம் மெய்மறக்கும் ஆன்மீகத்தில்….
அளவெடுத்த வார்த்தை குற்றம் நண்பர்கள் கூடாரத்தில்….
பிறன்மனை நோக்குதல் குற்றமே…
பிரிவினை பேசுதல் குற்றமே…
நட்பினை தொலைப்பது போலவே கடமையை மறப்பதும் குற்றமே… குற்றமே…
ஒவொருவன் குற்றத்திற்கும் …. அவனுக்கென நியாயம் உண்டு….
இறுதியாய் காலம் சொல்லும் நியாங்கள் சபையில் உண்டு…
மனிதரை ஏவிவிட்டே தான் … மனிதனை கொல்கிறானே மனிதன்…
ஏதுமற்று அழுவோருக்கெல்லாம் இறைவன் தானே கூலி படைத்தலைவன்…

படம்: குற்றம் 23
பாடல்வரிகள்: விவேகா

Sunday, April 24, 2016

கண்ணாமூச்சி கண்ணாமூச்சி கலங்கிடாத மாமா…

சாரையாய் எரும்பு வந்தால்... பாறையும் தேயும்... தீக்குச்சி பொரி பரந்து காடு பத்தி வேகும்….
பாடத்தில் படித்திருக்கிறொம்... வாழ்க்கையில் பார்த்திருக்கிறொம்….
சோதனை தீரும்... நம் சொல்லுக்கு மதிப்பும் ஏரும்....

கண்ணாமூச்சி கண்ணாமூச்சி கலங்கிடாத மாமா…
காலம் நம்மகையில்வரும் கண்ணீர் சிந்த வேணாம்
இளைத்தவன் கொழுப்பான்... விழுந்தவன் எழுவான்...
இதுதான் இங்கே வரலாறு…. எதற்கு சோகம் விளையாடு…
தக்கயை முழ்கடிக்கதண்ணீரால் முடியாது… இறக்கை இரண்டு முளைத்து விட்டால்...வேலியெதும் கிடையாது...
கவலையை வீசியெறி... கனவெல்லாம் பலிக்கும்... மனசு திடம் இருந்தால்... மலையும் கூடஒதுங்கும்
பானைக்கு கண் வைத்த​...சோளக்காட்டு பொம்மை போல​... பயத்தை காட்டஇந்தபூமியில் நிறையஉண்டு…
முதுகை காட்டி ஓடியவன் ஜைத்ததில்லை முயற்சி செய்தவர்கள் தோற்த்தாக சரித்திரம் இல்லை
வலையில் சிக்கிவிட்டால் மீன் உனக்கு உணவு… அணையில் சிக்கிவிட்டால் நீ மீனுக்கு உணவு…
அர்சுனன் அம்புபோல் லட்சியத்தை நோக்கி ஓடு... ஆயுளும் இருக்குதப்பா... ஆசைகளும் இருக்குதப்பா...
யானைக்கும் இடரும் ஆனால் யானை பலம் குறைந்ததில்லை… எப்பவும் ஜைத்தவர்கள் ஊருக்குள் யாரும் இல்லை…
உள் வாங்கும் அலை எல்லாம் உடனெ திரும்பி வரும்…. நமக்கென்று எழுதிவைத்த நல்ல காலம் மீண்டும் வரும்….
கயிர் அறுந்து போனாலும்... கட்டுமரம் மூழ்காது… எங்க எண்ணம் ஆனாலும் மனச விடக் கூடாது…
எல்லையை கடந்திடலாம்… எதையும் சாதிக்கலாம் ...
கவலையை புதைத்து வை...நம்பிக்கையை விதைத்து வை...

From Movie- Adra Machan Visilu