INFOS SMART

Saturday, December 7, 2019

நெஞ்சோடு கலந்திடு உறவாலே… படம்: காதல் கொண்டேன், பாடல் வரிகள் : நா முத்துக்குமார்

நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை…. காயங்கள் மறந்திடு அன்பே
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்… சிறு பூவாக நீ மலர்வாயே?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்… வலி போகும் என் அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா

நெஞ்சோடு கலந்திடு உறவாலே…. காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தால்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வேனே
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே… காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை… காயங்கள் மறந்திடு அன்பே…

படம்: காதல் கொண்டேன்
பாடல் வரிகள் : நா முத்துக்குமார்

Sunday, November 24, 2019

சொல் சொல் சொல் அன்பே நி சொல், படம் : தலைவா, பாடல் வரிகள்: நா முத்துக்குமார்


சொல் சொல் சொல் அன்பே நி சொல் நில் நில் நில் போகாதே நில் சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் சொல்வதேல்லாம் கண்ணாலே சொல்
 
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மேதியதும் காதல் சாரல் என்னை தாக்க அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று உன்னை என்னை ஒன்று சேர்க்க என்னென்னவோ... தேன்றுதே என் பெண்ணே உன் நெருக்கம்... வேண்டுதே கண்ணே கண்ணே...
(குழு: சொல் சொல்)


ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மேதியதும் காதல் சாரல் என்னை தாக்க அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று உன்னை என்னை ஒன்று சேர்க்க
கனவுகள் கேட்குது நீ வர கை விரல் கேட்குது நீ தோட
யாரோ என்னை பார்க்க ஒரு என்னம் தோன்றிட நீயா எனப் பார்ப்பேன் அதை எங்கே சொல்லிட
... என் நேரம் இன்று அவசரமாக மாறிபோனதே என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே
இலைகளில் பனித்துளி விழுவதும் வெயில் வந்து அதன் மேலே எழுவதும் இயற்கை நடக்கிற ரகசிய அன்பே அன்பே...
சொல் சொல் சொல் அன்பே நி சொல் நில் நில் நில் போகாதே நில்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மேதியதும் காதல் சாரல் என்னை தாக்க அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று உன்னை என்னை ஒன்று சேர்க்க
இருவரும் ஒரு மொழி பேசலாம் இடையினில் மௌனத்தில் பேசலாம்
பெண்ணே என் நெஞ்சம் என்னும் பூட்டை திறக்க கண்ணே உன் கண்கள் அது சாவிகொடுக்க
என் பெயரில் உன் பெயரினை சேர்க்க ஆசை வந்ததே உன் தோளில் எந்தன் தோள் வந்து சாய நேரம் வந்ததே
இது இது இது ஒரு இன்பமா இது இது இது ஒரு துன்பமா இன்பமும் துன்பமும் சேர்த்துதான் சொல் சொல்வாய் பெண்ணே...
சொல் சொல் சொல் அன்பே நி சொல் நில் நில் நில் போகாதே நி ல்
(ஒரு மஞ்சள்)

சொல் சொல் சொல் அன்பே நி சொல் நில் நில் நில் போகாதே நில் சொல் சொல் சொல் சொல்லாமலே சொல் சொல்வதேல்லாம் கண்ணாலே சொல்

படம் : தலைவா
பாடல் வரிகள்: நா முத்துக்குமார்