INFOS SMART

Saturday, May 5, 2018

குறும்பா பாடல் வரிகள்


உயரம் குறைந்ததேன் உன்னால்
மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே….

சிறகாய் விரிந்தேன் உன்னால்
தரையில் பறந்தேன் உன்னால்
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே….

ஒற்றை கையால் ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம்
உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம் ...நொறுக்கிடுவோம்….

குறும்பா என் உலகே நீதாண்டா ....
குறும்பா என் உயிரே நீதாண்டா ....
குறும்பா என் உலகே நீதாண்டா ....
குறும்பா என் உயிரே நீதாண்டா ....

விண்வெளி மீன்களிலெல்லாம் உண்விழிதானே பார்த்தேன் ...
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் ...
வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடு ஏற்பேன் ....
உன்னிடம் மட்டும்தானே தோர்ப்பேன்...

ஆட்டம் போடும்போதெல்லாம் ...உலகே அழகாய் மாறும் ...
வீட்டு பாடம் செய்தாலோ ரத்தஅழுத்தம் ஏறும் ….
உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய் எனக்குத்தெரியாதா…

குறும்பா என் உலகே நீதாண்டா ....
குறும்பா என் உயிரே நீதாண்டா ....
குறும்பா என் உலகே நீதாண்டா ....
குறும்பா என் உயிரே நீதாண்டா ....

உளறல் மொழிகள் உன்னால் ....
காட்டும் கனவும் உன்னால் ....
கிறுக்காய் ஆனேன் உன்னாலே ...

எறும்போடேறும்பாய் சிலநாள் ...
பூனை நாயாய் சிலநாள் ....
மனிதன் ஆனேன் உன்னாலே ...

விந்தையென்று கையில் வந்தாயே என்மனம் குளிர....
தந்தையென்று பட்டம் தந்தாயே ...நான்தலைநிமிர ...தலைநிமிர....

குறும்பா என் உலகே நீதாண்டா ....
குறும்பா என் உயிரே நீதாண்டா ....
குறும்பா என் உதிரம் நீதாண்டா ....
குறும்பா என் விடியல் நீதாண்டா ....

படம்: டிக்டிக்...டிக்
பாடல்வரிகள்: கார்கி