எந்த வழி போகுமோ எந்த ஊறு சேருமோ காத்துக்கு தெசை இருக்கா....
எந்த சொந்தம் மாறுமோ...எந்த பந்தம் கூடுமோ...வாழ்வுக்கு கணக்ககிருக்கா...
கல்லுச்சாங் குருவி முள்ளுக்குள் உறங்கும்...
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்..
வேருக்கு மண் துணை..மண்க்கு வேர் துணை...தனியாக ஏதும் வாழாது...
வெள்ளுத்தது பாலு..கருத்தது காக்கா..இதுதான்..இதுதான்..ஏழை மக்கா..
ஒரு சொட்டு கண்ணீர் உள்ளங்கையில்..விழுந்தா உசுர் தரும் பாவி மக்கா..
நேத்து வச்ச கூழு மட்டும்..சொத்து சொகம் ஆகுமே..
அந்த கூழ பகுந்து கொள்ள ஆளும் பேரும் தேடுமே..
பாசக்கார
சாதி எங்க கூட்டமே..நேசம் காட்டுனா..நேஞ்சுலெ ஒட்டுமே..
இத்து போன வாழ்க்கை.. இஞ்சிபோன உசுரு உனக்கு நீயே பாரமப்பா..
ஒத்தையில கடந்தா
நெத்தி தொட்டு பாக்க தொத்த உயிர் வேணுமப்பா..
ரெத்த பந்தம் பாத்திருந்தா பத்து நூறு சொந்தந்தா..
சித்த பந்தம் கூடி வந்தா சேர்ந்தெல்லா சொந்தந்தா
சேலை கட்டும் கூட்டம் எல்லாம் தாயிதான்..
சோறு போட்டவ யாருமே சாமிதான்...
படம்:
இடம் பொருள் ஏவல்
பாடலாசிரியர்: வைரமுத்து