INFOS SMART

Monday, September 16, 2013

ஒளி....

Light and Dark
ஒளி இருக்கும் இடத்திற்கு இருள் வருவதில்லை...
இருட்டு ஒருமுறை கடவுளிடம் சென்று புகார் செய்தது.
" இந்த சூரியன் எப்போதும் என்னிடம் வம்பு செய்துகொண்டே இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் என்னை துரத்திக்கொண்டே வருகிறது. சூரியனால் மிகவும் தொல்லைப்பட்டுவிட்டேன். பொழுது விடிந்தால் அது என்னை கட்டிப்போட்டு விடுகிறது. மாலை நேரம் வரும்போது மிகவும் சிரமப்பட்டுதான் நான் அதனிடமிருந்து விடுபட வேண்டி இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன் ? ஏன் சூரியன் என்னிடம் பகைமை பாராட்டுகிறது ? என்னை துன்புருத்துவதற்காக அது இரவு பகலாக சுற்றி வருகிறது. அதனிடமிருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா ? சூரியனிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லி, கண்டித்து வையுங்கள்." என்றது

கடவுள் சூரியனை வரவழைத்துச் சொன்னார் : " நீ ஏன் இருட்டைத் தொல்லை செய்கிறாய் ? இருட்டு உனக்கு என்ன கெடுதல் செய்தது ? எதுவானாலும் என்னிடம் சொல். " என்றார் .

சூரியன் சொன்னது :" என்ன, இருட்டா ? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றி வந்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை நான் இருட்டைப் பார்த்ததே இல்லையே. இருட்டைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே ! எங்கே இருட்டு ? அதை என் முன்னாள் வர சொல்லுங்கள். நான் ஏதும் குற்றம் புரிந்திருந்தால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலாவது நான் அதை பார்த்து விடுகிறேன்." என்றது
சரியென்று கடவுள் இருட்டை அழைத்தார். ஆனால் இருட்டால் ஒளி இருக்கும் இடத்திற்கு வர முடியவில்லை. எப்படி வர முடியும் ? ஒளியே இருட்டை தேடி சென்றாலும் இருட்டு மிக மிக தொலைவாக ஓடிவிடும்.
ஒளி என்பது உண்மை. ஒளி என்பது அறிவு. ஒளிதான் அன்பும் திறமையும். இவற்றை தன்னிடம் கொண்டிருக்கும் எவரையும், உலகின் எந்த சக்தியும் தோற்கடிக்க முடியாது நட்புகளே...
நட்புகளே...

நமக்கும் தேவை... குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்..
தினமணியில் படித்ததை எழுதியது சிதம்பரம் திருஞானம்.

Wednesday, September 11, 2013

பாரதி..! ( பாகம் - 1 )



கறுப்பு கோட் தலைப்பாகை தான் அவரது அடையாளம் வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

"மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்" என்று இவர் சொன்னபோது, "கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?" என்று கேட்டார் காந்தி. ``அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி.`` இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’’ என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!
தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!
எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வார். `பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ பாட்டு!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும் போலீஸ் விசாரணையின் போது ``நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?” என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் கிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க.... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் `கோயில் யானை என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

'ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20 –க்கும் குறைவானவர்களே!

Monday, September 2, 2013

தமிழ்

“எங்கிருந்தாலும் நாங்க என்ன செஞ்சாலும்
தமிழோடு தானே எங்க சந்தோசம்... சங்கீதம்“
படம்: தலைவா
பாடல் வரிகள்:நா முத்து குமார்

Wednesday, June 26, 2013

மழை நீர் சேமிப்பு


நாம் ஏன் மழை நீர் சேமிக்க வேண்டும்

மழைநீர் சேமிப்புவழக்கியில் பணத்தை சேமித்து வைப்பதுபோல் ஆகும். பூமியில் மனிதர்கள் குடிக்ககூடியநீர் அளவு 1மூவிட குறைவாகும். ஆனால் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது ஆதனால் அனைத்தும்அனைவரும் தண்ணீPரை சிக்கனமாக பன்படுத்த வேண்டும். மனிதநல அறக்கட்டளை மழைநீர் மற்றும் சேமிப்பின் நன்மைகள் பற்றிமக்கள் மத்தியில் விழிப்புணர்வுக்குமுகாம் ஒன்றுநடத்தப்பட்டத. மக்களுக்கு மழைநீர் உபயோகம் படுத்தும் முறையை 15,000பிட் நோட்டிஸ் விடுவித்தன.

எப்படி நான் தண்ணீர் சேமிக்க முடியுமா?

மழைநீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது. நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிரப்பி பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க்குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும். இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.

மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் முறை:

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

இவைகள் தமக்குள்ளும், தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை, தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து, கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001 தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.

ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும், தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.

உதாரணமாக, சில பகுதியில் மூன்று அடி ஆழத்திலும், சில பகுதியில் 60 அடி ஆழத்திலும், ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது. மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.

மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 – 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள், மழை நீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

Sunday, June 2, 2013

மண்ணுக்கு புற்றுநோய்



நவீன உலகில், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பாரம்பரிய  துணிப்பைகளை  மறந்து,  எத்தேவைக்கும்  கொடிய பிளாஸ்டிக் பைகளையே பயன்படுத்துவது தொடருகிறது. மக்கும் திறனற்ற பிளாஸ்டிக் பொருட்கள், நிலத்தடி நீர் சுழற்சிக்கு பெரும் தடையாக இருப்பதோடு, சுற்றுச்சூழ்ல், மனிதன் மற்றும் உயிரினங்களுக்கு பெரும் தீங்கை விளைவித்து வருகிறது.
ஆட்சி அதிகரத்தில் இருக்கும் அரசும், போதிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கேலிக்கூத்து ஒவ்வொரு மனிதனும் சிந்தனையை மீளாக்கம் செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தால் எதிர்காலதில் கொஞ்சமாவது நீர் கிடைக்கும், இல்லையெனில் நீரைக்கூட இறக்குமதி செய்யும் அபாயம் ஏற்ப்பட வாய்ப்புண்டு.இது நடக்காமல் இருந்திட, நமக்கு கொடுத்த இயற்கையை பொக்கிஷமாக பாதுகாத்தால் போதும்.

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள்:
தூக்கி எறியும் கேரிபேக்,டம்ளர் போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்குவதில்லை; மறுசுழற்சி செய்ய முடியாது, இவை நிலதில் மழை நிரை உட்புக வழிவிடாததால், மண்ணின் தன்மை பாதிக்கிறது. மேலும்,   
வேதிப்பொருட்களால் நிலம் மற்றும் நீரின் தன்மையும் கெடுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடையில் தேங்குவதால், அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. பிற் குப்பைகளுடன் எரிக்கும்போது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்ககூடிய 'டயாக்சின்' வாயு வெளியேறுகிறது.மெல்லிய பிளாஸ்டிக் கேரிபேக்குகளில், சூடான உணவுப்பொருட்களை பார்சல் செயும்போது, வேதிப்பொருட்கள் உணவுடன் கலப்பதால், உடல்நலம் பதிக்கப்படுகிறது. இந்த உணவை வெளியே எறியும் போது, அதை உண்ணக்கூடிய கால்நடைகள் இறக்கும் அபாயமுள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்:
ஒவ்வொரு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். 20 மைக்ரான் தடிமன் அளவுக்கு கீளுள்ள பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாட்டை தவிர்க்கலாம்.பிளாஸ்டிக் தயாரிப்புகளான கேரிபேக்,டம்ளர், டீ கப் போன்றவைக்கு பதிலாக, துணிப்பை,சுற்றுச்சூழ்லுக்கு உகந்த பேப்பர் கப், பாக்கு மட்டையிலான பொருட்களை பயன்படுதவும், வீட்டு குப்பையை மக்கும் மக்காத என தரம்பிரித்து, உள்ளாட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைதொடிகளில் இடுவது நல்லது.உணவகங்கள், விமானம்,ரயில்,மற்றும் பேருந்து நிலையங்களில், உணவுப் பொருட்களை பார்சல் செய்வதற்க்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.மீதமாகும் உணவுபொருட்களை பிளாஸ்டிக் கேரிபேக் கன்டெயனரில்,கட்டி குப்பை கழிவுகளுடன் வெளியேற்றுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. தொழிற்சாலை மற்றும் வர்தக நிறுவனங்களில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 20 மைக்ரான் தடிமனுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் கேரிபேக்களை, மொத்தமாகவொ சில்லரையாகவோ விற்பனை செய்யக்கூடாது.சேமித்தல், விற்பனையிலும் ஈடுபடக்கூடாது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை, தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யவும் கூடாது. இதை முறையாக பின்பற்றினால், வருங்கால சந்ததியினரின் தாகத்தை தணிக்க முடியும். முடியாதது என்று எதுவும்மில்லை எல்லாமெ இடைகாலதில் பழகிய பழக்கம் தான்
நன்றி தினமலர் 

Visit infossmart Classifieds for free advertisements