INFOS SMART

Sunday, June 2, 2013

மண்ணுக்கு புற்றுநோய்



நவீன உலகில், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பாரம்பரிய  துணிப்பைகளை  மறந்து,  எத்தேவைக்கும்  கொடிய பிளாஸ்டிக் பைகளையே பயன்படுத்துவது தொடருகிறது. மக்கும் திறனற்ற பிளாஸ்டிக் பொருட்கள், நிலத்தடி நீர் சுழற்சிக்கு பெரும் தடையாக இருப்பதோடு, சுற்றுச்சூழ்ல், மனிதன் மற்றும் உயிரினங்களுக்கு பெரும் தீங்கை விளைவித்து வருகிறது.
ஆட்சி அதிகரத்தில் இருக்கும் அரசும், போதிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கேலிக்கூத்து ஒவ்வொரு மனிதனும் சிந்தனையை மீளாக்கம் செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தால் எதிர்காலதில் கொஞ்சமாவது நீர் கிடைக்கும், இல்லையெனில் நீரைக்கூட இறக்குமதி செய்யும் அபாயம் ஏற்ப்பட வாய்ப்புண்டு.இது நடக்காமல் இருந்திட, நமக்கு கொடுத்த இயற்கையை பொக்கிஷமாக பாதுகாத்தால் போதும்.

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள்:
தூக்கி எறியும் கேரிபேக்,டம்ளர் போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்குவதில்லை; மறுசுழற்சி செய்ய முடியாது, இவை நிலதில் மழை நிரை உட்புக வழிவிடாததால், மண்ணின் தன்மை பாதிக்கிறது. மேலும்,   
வேதிப்பொருட்களால் நிலம் மற்றும் நீரின் தன்மையும் கெடுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடையில் தேங்குவதால், அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. பிற் குப்பைகளுடன் எரிக்கும்போது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்ககூடிய 'டயாக்சின்' வாயு வெளியேறுகிறது.மெல்லிய பிளாஸ்டிக் கேரிபேக்குகளில், சூடான உணவுப்பொருட்களை பார்சல் செயும்போது, வேதிப்பொருட்கள் உணவுடன் கலப்பதால், உடல்நலம் பதிக்கப்படுகிறது. இந்த உணவை வெளியே எறியும் போது, அதை உண்ணக்கூடிய கால்நடைகள் இறக்கும் அபாயமுள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்:
ஒவ்வொரு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். 20 மைக்ரான் தடிமன் அளவுக்கு கீளுள்ள பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாட்டை தவிர்க்கலாம்.பிளாஸ்டிக் தயாரிப்புகளான கேரிபேக்,டம்ளர், டீ கப் போன்றவைக்கு பதிலாக, துணிப்பை,சுற்றுச்சூழ்லுக்கு உகந்த பேப்பர் கப், பாக்கு மட்டையிலான பொருட்களை பயன்படுதவும், வீட்டு குப்பையை மக்கும் மக்காத என தரம்பிரித்து, உள்ளாட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைதொடிகளில் இடுவது நல்லது.உணவகங்கள், விமானம்,ரயில்,மற்றும் பேருந்து நிலையங்களில், உணவுப் பொருட்களை பார்சல் செய்வதற்க்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.மீதமாகும் உணவுபொருட்களை பிளாஸ்டிக் கேரிபேக் கன்டெயனரில்,கட்டி குப்பை கழிவுகளுடன் வெளியேற்றுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. தொழிற்சாலை மற்றும் வர்தக நிறுவனங்களில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 20 மைக்ரான் தடிமனுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் கேரிபேக்களை, மொத்தமாகவொ சில்லரையாகவோ விற்பனை செய்யக்கூடாது.சேமித்தல், விற்பனையிலும் ஈடுபடக்கூடாது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை, தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யவும் கூடாது. இதை முறையாக பின்பற்றினால், வருங்கால சந்ததியினரின் தாகத்தை தணிக்க முடியும். முடியாதது என்று எதுவும்மில்லை எல்லாமெ இடைகாலதில் பழகிய பழக்கம் தான்
நன்றி தினமலர் 

Visit infossmart Classifieds for free advertisements

1 comment:

  1. You’ve written nice post, I am gonna bookmark this page, thanks for info. I actually appreciate your own position and I will be sure to come back here. Office benching systems miami

    ReplyDelete