INFOS SMART

Friday, September 20, 2019

காற்றின் மொழி.... பாடல் வரிகள்...

காற்றின் மொழி.... ஒலியா இசையா...
பூவின் மொழி... நிறமா மணமா...
கடலின் மொழிஅலையா நுரையா...
காதல் மொழி ... விழியா இதழா...
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்... மனிதரின் மொழிகள் தேவையில்லை..
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

காற்றின் மொழி.... ஒலியா இசையா...
பூவின் மொழி... நிறமா மணமா...

காற்று வீசும்போது... திசைகள் கிடையாது... காதல் பேசும்போது மொழிகள் கிடையாது…
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது... கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது...
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது…காதல் பேசும் மொழியெல்லாம்... ஸப்தக்கூட்டில் அடங்காது…
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்... மனிதரின் மொழிகள் தேவையில்லை..
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை...
காற்றின் மொழி........
வானம் பேசும் பேச்சு... துளியாய் வெளியாகும்...
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்...
உண்மை ஊமையானால்... கண்ணீர் மொழியாகும்...
பெண்மை ஊமையானால்... நாணம் மொழியாகும்....
ஓசை தூங்கும் ஜாமத்தில்... உச்சி மீன்கள் மொழியாகும்...
ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவுகூட மொழியாகும்...

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்... மனிதரின் மொழிகள் தேவையில்லை..
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

காற்றின் மொழி.... ஒலியா இசையா...
பூவின் மொழி... நிறமா மணமா...
கடலின் மொழிஅலையா நுரையா...
காதல் மொழி ... விழியா இதழா...

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்... மனிதரின் மொழிகள் தேவையில்லை..
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை...
காற்றின் மொழி....


படம்: மொழி
பாடல் வரிகள்: வைரமுத்து













No comments:

Post a Comment