பறவையே எங்கு இருக்கிறாய்....
பறக்கவே
என்னை அழைக்கிறாய்... தடயங்கள் தேடி வருகிறேன்...அன்பே......
பறவையே எங்கு இருக்கிறாய்....
பறக்கவே
என்னை அழைக்கிறாய்... தடயங்கள் தேடி வருகிறேன்...அன்பே......
அடி என் பூமி தொடங்கும்
இடம் எது நீதானே...
அடி என் பாதை இருக்கும்
இடம் எது நீதானே....
பார்க்கும்
திசைகளெல்லாம்....பாவை முகம் வருதே...
மீன்கள்
கானலின் நீரில் தெரிவதுண்டோ... கண்கள்
பொய்கள் சொல்வதுண்டோ
நீ போட கடிதத்தின் வரிகள்....
கடலாக...
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக...
பறவையே எங்கு இருக்கிறாய்....
பறக்கவே
என்னை அழைக்கிறாய்... தடயங்கள் தேடி வருகிறேன்...அன்பே......
உன்னோடு
நானும்... போகின்ற பாதை... இது நீளாதோ...தோடு வானம் போலவே...
கதைபேசிக்கொண்டே
வா காற்றோடு போவோம்...
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
இந்த புல் பூண்டும் பறவையும்
நாமும் போதாதா...
இனி பூலோகம் முழுதும் அழகாய்
போகாதா...
முதன் முறை வாழபிடிக்குதே....முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே....
முதல் முறை முறிந்த..கிளையொன்று
பூக்குதே....
முதல் முறை கதவு திறக்குதே...
முதல் முறை காற்று வருகுதே...
முதல் முறை கனவு பலிக்குதே...
அன்பே...
ஏழை
....காதல்... மலைகள் தனில் தோன்றுகின்ற....
ஒரு நதியாகும்...
மண்ணில்...விழுந்தும் ஒரு காயமின்றி... உடையாமல்...உருண்டோடும்...நதியாகிடுவோம்....
இதோ இதோ இந்த பயணத்திலே...இது போதும் கண்மணி
வேறென்ன நானும் கேட்பேன்...
பிரிந்தாலும்
மனதிலே... இந்த நொடியில் என்றும்
வாழ்வேன்...
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடறதா...
என் தனியான பயணங்கள் இன்றுடன்
முடியாதா...
முதன் முறை வாழபிடிக்குதே.... முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே....
முதல் முறை முறிந்த… கிளையொன்று
பூக்குதே....
முதல் முறை கதவு திறக்குதே...
முதல் முறை காற்று வருகுதே...
முதல் முறை கனவு பலிக்குதே...
அன்பே...
படம்: தமிழ் ம்.எ
பாடல் வரிகள்: ந முத்துக்குமார்
No comments:
Post a Comment