INFOS SMART

Sunday, September 22, 2019

தேவதையை கண்டேன் - படம் : காதல்கொண்டேன்,பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்...என் உயிருடுன் கலந்துவிட்டாள்...
நெஞ்சுக்குள் நுழைந்தாள்... மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றிவைத்தாள்...
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது...அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது...
தீக்குளே விறல்வைத்தேன்...தனி தீவில் கடைவைத்தேன்...மணல்வீடு... கட்டிவைத்தேன் ....

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்...என் உயிருடுன் கலந்துவிட்டாள்...
நெஞ்சுக்குள் நுழைந்தாள்... மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றிவைத்தாள்...

தேவதை...தேவதை...தேவதை...தேவதை...
அவள் ஒரு தேவதை...தேவதை...தேவதை...தேவதை...தேவதை...தேவதை...தேவதை...தேவதை...தேவதை...
அவள் ஒரு தேவதை...தேவதை...தேவதை... தேவதை...தேவதை...தேவதை...தேவதை...தேவதை...

விழியோரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி...அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும்...போதும்...போதும்
அழியாமலே ஒரு நியாபகம் அலைபாயுதே என்ன காரணம்......
அருகாமையில் உன் வாசம் வீசினால்...சுவாசம் சூடேறிடும்....
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்...கூந்தலை போய்த்தான் சேராதே...
எதனை காதல்...எதனை ஆசை...தடுமாறுதே தடம்மாறுதே...
அடி பூமி கனவு உடைந்து போகுதே...

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்...என் உயிருடுன் கலந்துவிட்டாள்...
நெஞ்சுக்குள் நுழைந்தாள்... மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றிவைத்தாள்...

தோழியே ஒரு நேரத்தில்... தோளிலே நீ சாய்கையில்... பாவியாய் மனம் பாழாய் போகும்...போகும்...போகும்...
சோளியாய் என்னை சுழற்றினாய்... சூழ்நிலை திசை மாற்றினாய்...
கானலாய் ஒரு காதல் கொண்டேன்...கண்ணை குருடாக்கினாய்...
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்...காற்றிடம் கோபம் கிடையாது...
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்...எங்கு போவது என்ன ஆவது....
என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்வது...

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்...என் உயிருடுன் கலந்துவிட்டாள்...
நெஞ்சுக்குள் நுழைந்தாள்... மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றிவைத்தாள்...
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது...அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது...
தீக்குளே விறல்வைத்தேன்...தனி தீவில் கடைவைத்தேன்...மணல்வீடு... கட்டிவைத்தேன் ....
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்...என் உயிருடுன் கலந்துவிட்டாள்...
நெஞ்சுக்குள் நுழைந்தாள்... மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றிவைத்தாள்...

படம் : காதல்கொண்டேன்
பாடல் வரிகள்: முத்துக்குமார்
நா முத்துக்குமாரின் அணில் ஆடும் முன்றில் : https://amzn.to/2NzJOp7




No comments:

Post a Comment