மறு வார்த்தை பேசாதே மடிமீது
நீ தூங்கிடு ...
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு ....
மயில் தொகை போலே விரல்
உன்னை வருடும் ...
மனப்படமாய்
உரையாடல் நிகழும் ....
விழி நீரும் வீணாக இமைத்தாண்டகூடாதென…
துளியாக நான் சேர்த்தேன் ...
கடலாக கண்ணானதே...
மறந்தாலும்
நான் உன்னை நினைக்காத நாள்
இல்லையே...
பிரிந்தாலும்
என் அன்பு ஒருபோதும் பொய்
இல்லையே...
விடியாத
காலைகள்... முடியாத மாலைகளில்... வடியாத
வேர்வை துளிகள்…
பிரியாத
போர்வை நொடிகள்...
மணிகாட்டும்
கடிகாரம்... தரும் வாதை அறிந்தோம்...
உடைமாற்றும்
இடைவேளை அதன்பின்பே உணர்ந்தோம்...
மறைவதே மனம் மடிந்தாலும் வரும்
....
முதல் நீ .... முடிவும்
நீ...
அலர் நீ ... அகிலம் நீ
...
தோலை தூரம் சென்றாலும்... தொடுவானம்
என்றாலும் நீ...
விழியோரம்
தானே மறைந்தாய்...உயிரோடு முன்பே கலந்தாய்...
இதழ் என்னும் மலர்கொண்டு... கடிதங்கள்
வரைந்தாய்...
பதில் நானும் தரும் முன்பே...
கனவாகி கலைந்தாய் ...
பிடிவாதம்
பிடி ... சினம் தீரும் அடி...
இழந்தோம்
எழில் கோலம்...இனிமேல் மழைக்கலாம்...
மறு வார்த்தை பேசாதே மடிமீது
நீ தூங்கிடு ...
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு ....
மயில் தொகை போலே விரல்
உன்னை வருடும் ...
மனப்படமாய்
உரையாடல் நிகழும் ....
விழி நீரும் வீணாக இமைத்தாண்டகூடாதென…
துளியாக நான் சேர்த்தேன் ...
கடலாக கண்ணானதே...
மறந்தாலும்
நான் உன்னை நினைக்காத நாள்
இல்லையே...
பிரிந்தாலும்
என் அன்பு ஒருபோதும் பொய்
இல்லையே...
மறு வார்த்தை பேசாதே மடிமீது
நீ தூங்கிடு ...
படம்: என்னை நோக்கி பாயும்
தோட்டா.
பாடல் வரிகள்: தாமரை
No comments:
Post a Comment