INFOS SMART

Saturday, December 15, 2012

கடல் பட பாடல் வரிகள்.....

சித்திரை .. நிலா.. ஒரே நெலா…

பறந்த...வானம்...படச்ச கடவுள்..எல்லாமே...ஒத்தையிலெ...நிக்குது டே...

நீ கூட ஒத்தையிலெ..நிக்கிர டே...

எட்டு வை மக்க...

எட்டுவச்சு ஆகாசம்.... தொட்டுவை மக்க...



சித்திரை நிலா.. ஒரே நெலா…

பறந்த....வானம்...படச்ச கடவுள்..எல்லாமே...ஒத்தையிலெ...நிக்குது டே...

நீ கூட ஒத்தையிலெ..நிக்கிர டே...

எட்டு வை மக்க...

எட்டுவச்சு ஆகாசம்.... தொட்டுவை மக்க...



மனிதன் நினைதால் வழி பிறக்கும்...

மனதில் இருந்து ஒளி பிறக்கும்....

புதைக்கின்ற விதையும் முயற்சி கொண்டால்தான் பூமியும் கூட தாள் திறக்கும்...

எட்டு வை மக்க...

எட்டுவச்சு ஆகாசம்.... தொட்டுவை மக்க...



கண்களிருந்தே காட்சிகள் தோன்றும்.

களங்களிருந்தே தேசங்கள் தோன்றும்

துயரத்திலிருந்தே காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே ஞானங்கள் தோன்றும்

சூரியன் மறைந்தால் விளக்கொன்று …..சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்..

சித்திரை நிலா.. ஒரே நெலா…
எட்டு வை மக்க...
எட்டுவச்சு ஆகாசம்.... தொட்டுவை மக்க...
மரமொன்று விழுந்தால் மறுபடி தளைக்கும்

மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் ?


பூமியை திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால் தேன் துளி இருக்கும்....

மரமொன்று விழுந்தால் மறுபடி தளைக்கும்
மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் ?


பூமியை திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால் தேன் துளி இருக்கும்
நதிகளைத் திறந்தால் கழனிகள் செழிக்கும்

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்.
நதிகளைத் திறந்தால் கழனிகள் செழிக்கும்

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்.

சித்திரை நிலா.. ஒரே நெலா…
சித்திரை நிலா.. ஒரே நெலா…

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்
அதோ.... அதோ...ஒரே...நெலா....
  

பாடல்: கவிஞர் வைரமுத்து (தண்ணீர் தேசம்)


Visit infossmart Classifieds for free advertisments

1 comment:

  1. Would be great if you could post the meaning of this song.

    ReplyDelete