INFOS SMART

Sunday, March 30, 2025

மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்

 ஆ ஆ ஆ  ஆ ஆ... ஆ ஆ ஆ ஓ ஆ ஆ ....

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...

தொட்டவுடன் சுட்டதென கட்டழகு வட்டநிலவோ... கண்ணே என்கண்ணே....

பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்...

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...


 தாமரை மேல, நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வெதென்ன....

நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன....

சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்... பூவே உன் வாழ்க்கைதான் என்ன...சொல்.

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...

 

மேடையை போலே... வாழ்கை அல்ல... நாடகம் ஆனதும் விலகிச்செல்ல....

ஓடையை போலே... உறவும் அல்ல... பாதைகள் மாறியே  பயணம் செல்ல...

விண்ணோடுதான் உலாவும் ...வெள்ளிவண்ண நிலாவும்...என்னோடுதான் நீ வந்தால் என்ன....வா...

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...

தொட்டவுடன் சுட்டதென கட்டழகு வட்டநிலவோ... கண்ணே என்கண்ணே....

பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ  சொல்...

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...அன்பே என்னன்பே...

 

படம்: மௌன ராகம்.

பாடல் வரிகள் : கவிஞர் வாலி

No comments:

Post a Comment