INFOS SMART

Sunday, April 7, 2024

முருகன் பக்தி பாடல் 2

முருகா

அறுபடைவீடும் அருள் வழங்கும் முருகா அருகே நீ ஓடோடிவா...

மூவிரண்டு முகம் ஜொலிக்க  ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா...

தடை நூறு வந்தாலும் செயல் வெற்றி ஆக்கித்தரும் தாராள குணம் கொண்டவன்

நீ வலைவீசும் அறிவுக்கு தொலைவான வனாகி மாறாது அருள் செய்பவன்

தீராத காதலொடு திருவடியை தோளுபவர்க்கு திரவியமே தருகின்றவன்

நீ தாராள உள்ளமொடு தவக்கோலம் கொண்டு பெரும் தார்மீக பொருள் தந்தவன்

பன்னீரில் அபிஷேகம் வெந்நீரில் அலங்காரம் அதிரூபம் கொண்ட முருகன்..

நீ புரியாமல் அடியேனும் பிழை நூறு செய்தலும் பொறுத்தருளும் செல்வக்குமாரன்

அறுபடைவீடும் அருள் வழங்கும் முருகா அருகே நீ ஓடோடிவா...

மூவிரண்டு முகம் ஜொலிக்க  ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா...

No comments:

Post a Comment