- பேசும்முன் கேளுங்கள் , எழுதும்முன் யோசியுங்கள் , செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
- சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
- யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர் .
- நான் மாறும்போது தானும் மாறியும் , நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை . அதற்கு என் நிழலே போதும் !
- நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
-
நான்
குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே
சென்று விடுவது வழக்கம் . அதுதான் என்னை மனிதனாக்கியது. -
நம்மிடம்
பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே ,
சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம் ! - வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை .
- சமையல்
சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு . அறுவடை
சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு . திருமணம் பொருந்தாவிடில்
வாழ்நாளே இழப்பு . - முழுமையான மனிதர்கள் இருவர் . ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை . மற்றவர் இறந்துவிட்டார். - ஓடுவதில் பயனில்லை . நேரத்தில் புறப்படுங்கள்
- எல்லோரையும் நேசிப்பது சிரமம் . ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
- நல்லவர்களோடு நட்பாயிரு . நீயும் நல்லவனாவாய்
- காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை . ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
- இவர்கள் ஏன் இப்படி ? என்பதை விட , இவர்கள் இப்படித்தான்
என எண்ணிக்கொள். - யார் சொல்வது சரி என்பதல்ல , எது சரி என்பதே முக்கியம்
- ஆயிரம் முறை சிந்தியுங்கள் . ஒருமுறை முடிவெடுங்கள்
- பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது . பயத்தை உதறி எறிவோம்
- நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
- உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை
வலம் வந்துவிடும் - உண்மை தனியாகச் செல்லும் . பொய்க்குத்தான் துணை வேண்டும்
- வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக
ஆக்கிக்கொள்வோம் . - தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு
இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான். - உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
- செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
- அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர்
ஆர்வத்துடன் பணிபுரிவர் - வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன் , இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
- தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய்
என்பதற்கான எச்சரிக்கை . - பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று
எதிர்பார்க்காமல் , நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க
வேண்டும் . - கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை . சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
- ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும்
சந்தேகத்துடனே துவக்க வேண்டும் - சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல்
இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம். - ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க
வைக்கிறது.
INFOS SMART
Friday, August 3, 2012
பேசும்முன் ..........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment