INFOS SMART

Wednesday, June 26, 2024

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான் 

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான் 

பூவே காதல் தீவே..

மண்மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே 

உல்லாச பூமி இங்கு உண்டானதே..

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

பூவே காதல் தீவே..

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே..

உல்லாச மேடைமேலே ஓரங்க நாடகம், இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்..

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன், அங்கங்கு ஆசைத்தீயில் நான்வேகிறேன்..

உன் ராக மோகனம் என் காதல் வாகனம், செந்தாமரை செந்தேன்மழை என் ஆவி நீயே தேவி..

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

பூவே காதல் தீவே ..

கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே, துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே..

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே, பெண்பாவை கண்களென்று பொய்சொல்லுதே..

முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என்காதல் கண்கள் போகும் பல்லாகிலே..

தெனோடை ஓரமே நீராடும் நேரமே, புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய்ராணி ..

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

பூவே காதல் தீவே ..

மண்மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே 

உல்லாச பூமி இங்கு உண்டானதே ..

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்  தேசம் நீ தான்

பூவே காதல் தீவே ..

படம் : ரெட்டைவால்குருவி 

பாடல் வரிகள் : மூ மேத்தா 




Monday, June 24, 2024

புறநானூறு 112 ஆவது பாடல்

 அற்றைத் திங்கள் 

அவ்வெண் நிலவின் 

எந்தையும் உடையேம் 

எம் குன்றும் பிறர் 

கொளார்.

இற்றைத் திங்கள் 

இவ்வெண் நிலவின் 

வென்று ஏறி முரசின் 

வேந்தர் எம் குன்று 

கொண்டார் யாம் 

எந்தையும் இலமே 

 

Saturday, June 22, 2024

ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய வேல்மாறல்

பழுத்தமுது தமிழ்ப்பலகை 

இருக்கும்ஒரு கவிபுலவன் 

இசைக்குஉருகி வரைகுகையை 

இடித்துவழி காணும்..

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

***

தருக்கிநமன் முருக்கவரின் 

எருக்குமதி தரித்தமுடி 

படைத்த விறல் படித்த இறை 

கழட்குநிகர் ஆகும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

******

வேல்மாறல் - 10

திசைக்கிரியை முதற்குலிசன் 

அறுத்தசிறை முளைத்த(து)என 

முகட்டின்இடை பறக்கஅற 

விசைத்(து) அதிர ஓடும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே

******

வேல்மாறல் - 12

தனித்துவழி நடக்கும்எனது 

இடத்தும்ஒரு வலத்தும்இரு 

புறத்தும்அரு(கு) அடுத்(து) 

இரவு பகற்றுணைய(து)  ஆகும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

******
வேல்மாறல் -14

திரைக்கடலை உடைத்துநிறை 
புனற்கடிது குடித்(து)உடையும் 
உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் 
நிறைத்துவிளை யாடும்  

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே

******

வேல்மாறல் -16

சலத்துவரும் அரக்கர்உடல் 

கொளுத்துவளர் பெருத்தகுடர் 

சிவத்ததொடை எனச்சிகையில் 

விருப்பமொடு சூடும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

******

வேல்மாறல் - 24

தலத்தில்உள கணத்தொகுதி 

களிப்பின்உண வழைப்ப(து) 

என மலர்க்கமல கரத்தின்முனை 

விதிர்க்கவளை(வு) ஆகும் 

திருத்தணியில் உதித்(து)அருளும் 

ஒருத்தன்மலை விருத்தன்என(து) 

உள்ளத்தில்உறை கருத்தன்மயில் 

நடத்துகுகன் வேலே 

Thursday, June 6, 2024

நாலடியார்

 பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா 

அலகதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் 

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு 

அச்சாணி அன்னதோர் சொல்