பட்டி ஆடுகள் இல்லை
பத்திற்கு மேற்பட்ட மாடுகள் இல்லை
பட்டி படல் கட்ட வேண்டியதில்லை
படல் கட்ட மின்ன மரங்களை தேடி அலைய வேண்டியதில்லை
பன நார் கிழிக்க அவசியமில்லை
ஒண்டுகளை பாதுகாக்க வேண்டியதில்லை
கரையான் அரிக்காமல் கம்பைகளை காக்க வேண்டியதில்லை
அடுப்பு கூட்ட கல் தேடி பழைய இடம் போக வேண்டியதில்லை
சாமிகளை தேடி கரணம் போட வேண்டியதில்லை
பச்சமாவு இடிக்க அவசியமில்லை
அரசாணிக்காய் பொறியல் செய்ய ஆட்கள் இல்லை
முடக்கத்தான் கொடி தேடி கால் முள் தைக்க வேண்டியதில்லை
சோழக்கட்டைகள் பிடுங்கி காடு சுத்தப்படுத்த தேவையில்லை
மாடுகளை குளிப்பாட்ட வேண்டியதில்லை
கன்று கழுவையில் பின் உதை வாங்க ஆள் இல்லை..
பட்டை தீட்ட காளை கொம்புகள் இல்லை
காளையை ஈன்ற நாட்டு மாடுகள் இல்லை
தார் முள் குத்திய உழைக்கால் தடிகள் இல்லை
சில நேரத்தில் நம் காலை கூட பதம் பார்க்கும் கூரிய கலப்பைகள் இல்லை
ஏறு பூட்டிய நுகங்கள் இல்லை
அத்தி கொழுந்து இல்லை
இழந்தை கொழுந்திற்கோ இனி வேலை இல்லை
தெப்பக்குளம் கட்ட காலையிலிருந்து சானி சேகரிக்க வேண்டியதில்லை
காப்பு கட்டுவார்கள் என பட்டி காக்கவில்லை
காவி பூச இனி அவசியமில்லை
மஞ்சள் கொத்துக்கள் வாங்கவேண்டியதில்லை
காவல் காக்கும் இரண்டு நாய்கள் இல்லை
உறவினருக்கு இனி இடமில்லை
மாலை நேரத்தை எதிர் நோக்கும் குழந்தைகள் இல்லை
கட்டில் போட்டு அமர பெரியோர்கள் இல்லை
பட்டி பொங்கல் வைக்க மங்கைகள் இல்லை
சாமி கும்பிட இங்கு ஆட்களும் இல்லை
விளக்கு மாவு எடுக்க இன்றய குழந்தைகளுக்கு தெரிவதில்லை
"அரசனம் பட்டியாரே அரசனம் கைத்தண்ணி பட்டியாரே கைத்தண்ணி
உண்ணுன்னு பட்டியாரே உண்ணுன்னு
வாய்கழுவு பட்டியிரே வாய்கழுவு"
இவ்வார்த்தைகள் காதுகளில் கேட்கவில்லை
கொடுத்ததும் பிரசாதம் உண்ணும் மாடு இல்லை
வருடத்தில் ஒரு நாள் விருந்து உண்ணும் சங்கராந்தி(நாய்) இல்லை
வென்பொங்கலில் விருந்து உண்ணும் பழக்கமும் இல்லை
பல பொறியல் கூட்டு பலகாரம் இல்லை
கொட்டு கொட்டி தெப்பக்குளத்தில் கன்றுகள் ஓட்ட சிறுவர்கள் இல்லை
சூந்தாடும் இளைஞர்கள் இல்லை
பால் பொங்க வைத்து அடுப்பு அனையவில்லை
இறுதியாய் கொல்லிக்கட்டையில் சுத்திப்போடும் பெரியவர்கள் இல்லை..
தலையில் சும்மாடு கூட்டி பொருட்கள் அனைத்தும் வீடு கொண்டுவர அவசியமில்லை
இது அனைத்தும் இருந்தது அன்று..
எதுமே
இல்லை இன்று.. அனைத்தும் கண்டு பழகி அதில் வாழ்ந்தவன் நான் இன்று
வீட்டிலேயே தொலைக்காட்சி முன் கழிகிறது மாட்டுப்பொங்கல் ,
மனக்குமுறலுடன்...
ஈடு கட்ட முடியாத இழப்புடன் வாழ்க்கை...
மூலதனமான விவசாயமே இல்லாத கிராமங்கள்...
உணவுக்கான பஞ்சம் வெகு தூரத்தில் இல்லை...
நம் பண்டய நாகரீகத்தை அழிக்க வெளியிலிருந்து ஒருவர் வர அவசியமில்லை..
விவசாயத்தையும் விவசாயியையும் மதிக்கும் குடியானவன் கூட குறைந்து விட்டனர்..
No comments:
Post a Comment