INFOS SMART

Sunday, November 3, 2019

முதல் மழை எனை நனைத்ததே, படம்: பீமா, பாடல் வரிகள்: நா முத்துக்குமார்


ஆண்: முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே... மனமும் பறந்ததே...
இதயமும்... .. இதமாய் மிதந்ததே

பெண்: இம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே... மனமும் பறந்ததே...
இதயமும்.. ம்.. இதயமாய் மிதந்ததே...யே..

ஆண்: கனவோடு தானடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னை படம் எடுத்தேன்...
ஆண்: என் வாசலில் நேற்று உன் வாசனை...
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...

பெண்: எதுவும் புரியா புது கவிதை...
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஒரு குடையால்..
காற்றோடுதான் நானும் பறந்தேன்..
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்..

ஆண்: முதல் மழை எனை நனைத்ததே..
ஆண்: முதல் முறை ஜன்னல் திறந்ததே..
ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே.. மனமும் பறந்ததே...
இதயமும்... ஹோய்.. இதமாய் மிதந்ததே...

பெண்: ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ...
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை....

ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உந்தன் நெருக்கம்....
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
...

படம்: பீமா
பாடல் வரிகள்: நா முத்துக்குமார்

No comments:

Post a Comment