மரம் வளர்ப்பு :
மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு :
மரங்கள் சூரிய ஒளியில் இருந்து நம்மையும், அனைத்து உயிரினங்களையும், பறவைகளையும் காக்கின்றது.
நம் பூமியினை குளிர்ச்சி செய்து மழை வர காரணமாக அமைகிறது.
மிக முக்கியமாக மரங்கள் நாம் சுவாசிக்கும் காற்றினை சுத்தப்படுத்தி மீண்டும் சுத்தமாக நமக்கு கொடுக்கிறது. மரங்கள் அழிக்கப்பட்டால், அதிகமான மக்கள் காற்றில்லாமல் உயிரிழக்க நேரிடும்.
கடற்கரை ஒர மரம் வளர்ப்பால், ஆபத்தான சுனாமியின் வேகம்கூட குறைக்கப்படுகிறது.
மலை பகுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் மலைச்சரிவு ஏற்படாமல் மரம் பாதுகாக்கிறது.
மரங்களில் உற்பத்தியாகும் இலை, காய், பழங்கள் நமக்கும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக பயன்படுகிறது.
மரங்களில் கிடைக்கும் காய், பழங்கள் நல்ல வருமானத்தையும் நமக்கு ஏற்படுத்தி கொடுக்கிறது.
மரங்கள் கதிர்வீச்சினை கட்டுப்படுத்துகிறது.
மரங்களின் பல பொருள்கள் மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
" மரத்தினைப்போல் சிறந்த வருமானம் கொடுக்கும் ஓன்று உலகில் உண்டோ " என்பதற்கு ஏற்ற வருமானம் ஏற்படுத்திக் கொடுக்கும் ஓன்று மரம்.
No comments:
Post a Comment