INFOS SMART

Wednesday, June 6, 2012

மிருகம்.......


உனக்குள்ளே மிருகம்
 தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
எரிமலைகள் வெடிக்கும்

கனவுகளை உணவாய்
கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி
உந்தன் கையில் கொடுக்கும்

எரிக்காமல் தேனடை கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வலி அதுதான் உயிர் பிழைக்கும்…
இதுவரையில் இயற்கையின் விதி இது தான்

நரகம் அதில் நியும் வாழ்ந்தால்
மிருகம் என மார வேண்டும்..
பலி கொடுத்து பயமுருத்து...
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து...

உலகமது உருண்டையில்லை
நிழல் உலகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை நீ உடைத்து
தட்டி தட்டி அதை  நிமிர்த்து

இங்கு நண்பன் யாரும் இல்லையெ
எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையெ
இனி நீதான் உனக்கு நண்பனே
என்றும் நீதான் உனக்கு பகைவனே

வலி அதுதான் உயிர் பிழைக்கும்…
இதுவரையில் இயற்கையின் விதி இது தான்

முதல் அடியில் நடுங்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்
மீண்டு வந்தால் மீண்டும் அடி
 மறுபடியும் மரண அடி

அடிக்கடி நீ இறக்க வேண்டும்…
மறுபடியும் பிறக்க வேண்டும்
உறக்கத்திலும் விழித்திரு நீ இரு விழியும் திறந்தபடி

இனி நீதான் உனக்கு தொல்லையே
என்றும் நீதான் உனக்கு எல்லையே
நீ தொட்டாய் கிழிக்கும் முல்லையே
வலிகள் இருந்தும் வலிக்கவில்லையே…

வலி அதுதான் உயிர் பிழைக்கும்…
இதுவரையில் இயற்கையின் விதி இது தான்

பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
படம்: பில்லா 2

Visit infossmart Classifieds for free advertisements

No comments:

Post a Comment