நினைக்கின்ற பொழுதெல்லாம் நிகரில்லா பக்திரசம் கொடுக்கின்ற சக்திவேலன்
நீ துதிக்கின்ற கணமெல்லாம் இணைகின்ற இதயம்தனை அளிக்கின்ற வெற்றிவேலன்
அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம் அன்புக்கு ஒரு தெய்வம் நீ
சிறு குறையேதும் இல்லாமல் குலம்காத்து எந்நாளும் அருள் செய்யும் பெருவள்ளல் நீ
மலைதோறும் படைவீடு இருந்தாலும் முருகா என் மனவீடு வந்து அமர்வாய்
நீ மயிலேறி விளையாடி சுவையான தமிழ்பாடல் கனிவோடு தந்து அருள்வாய்